அரசு தொழிற்பயிற்சியில் சேருவதற்கு கால நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

அரசு தொழிற்பயிற்சியில் சேருவதற்கு கால நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திருவெறும்பூர், மணிகண்டம் மற்றும் புள்ளம்பாடி (மகளிர்) ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு 
மற்றும் நேரடி சேர்க்கை 30.11.2021 வரை நடைபெற்ற நிலையில் தற்போது நேரடி சேர்க்கை 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ள 
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn