மனிதநேய மாமணி விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்

மனிதநேய மாமணி விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க

இலவச நூலகம் , அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்க்கு மனித நேய மாமணி விருதுதிருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் வழங்கினார்.

 திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசசாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நடைபெற்றது.

 விழாவில், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மனிதநேய பணியினை பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் குரு மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரியா சுவாமிகள் பொன்னாடை போர்த்தி உருத்திராக்க மாலை அணிவித்து பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் மனித நேய மாமணி விருதினை வழங்கினார்.

 

விருதினை பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகத்தினை இல்லத்தில் முகப்பிலேயே இருபத்தைந்து வருடங்களாக நடத்தி வருகின்றேன்

இதன் தனித்துவம் என்னவென்றால், தனியாக நூலகர் கிடையாது. . நூலகத்தில் இணைவதற்கு கட்டணம் கிடையாது. யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து புத்தகம் படிக்கலாம். 

மனித வாழ்வின் மாண்பானது நல்லவற்றை கற்றலும் அதன்படி நிற்றலுமே ஆகும். நல்ல பயனுள்ள நூல்களை கற்பதானது மனிதர்கள் தவறிழைக்காது அவர்கள் வாழும் வகையறிய செய்வதாக அமையும்.

இதனை “புத்தகங்கள் இல்லாத வீடு சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது” என குறிப்பிடுவார்கள். மக்களை மேன்மக்களாக மாற்றுவதில் நூலகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இதனால் தான் நமது முன்னோர்களான அரசர்கள் தமது நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் கல்விசாலைகள், நூலகங்கள் போன்றனவற்றை அமைத்தனர்.

நூலகங்கள் கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்து, தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியினை போக்கி அவர்களை பண்பட்ட, பக்குவப்பட்ட மனிதர்களாக சமூகத்துக்கு தருகின்றன. பல நூறு நண்பர்களை விட ஒரு நல்ல புத்தகம் மிகச்சிறந்த நண்பன் ஆகும். அவ்வகையில் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகத்தை அமைத்துள்ளோம்.

முன்பு நூலகத்தில் இருந்து புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தி வந்தோம். அதில் சிலர் நூல்களை திருப்பி தராத காரணத்தால் படித்து செல்லும் வகையில் நூலகத்தை நடத்தி வருகிறோம்.இந்த நூலகத்தை துவங்கியதற்கான காரணம் அனைவருக்கும் கட்டணமின்றி புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பதே. இதன் மூலம் மக்களை மேலும் பொறுப்புள்ளவர்களாக மாற்ற முயலுகின்றேன். இந்த நூலகத்தில் நூலகர் இல்லை என்பதோடு 

 எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். நூலகம் பற்றிய செய்தி வாய்வார்த்தையாக பல இடங்களுக்கு பரவியது. பலரும் இந்த நூலகத்திற்கு புத்தகங்களை இலவசமாக கொடுக்க துவங்கினர். மேலும் நூலகத்தை பார்த்துக்கொள்ள ஒருவரை நியமிப்பது சாத்தியமில்லை. மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் கட்டணமில்லாமல் புத்தகம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 25 ஆண்டுகளாக படிபடியாக 25000 புத்தகங்கள் உள்ள நூலகமாக உருவாக்கி உள்ளோம். நூலகச் செயற்பாடுகளுக்குத் தேவையான வசதிகளும் அவற்றுக்கு ஏற்றாற்போல பலவகையான நூல்களைச் சேமித்து வைக்க அலமாரி, பயனர்கள் நூல்களை எடுத்து வாசிப்பதற்கான வசதிகள், பயனர்களுக்கு நீர், மின்சாரம், மின்விசிறி, இருக்கைகள்அமைக்கப்பட்டுள்ளன.

 நூலகத்தில்கல்விசார் புத்தகங்கள்,சிறுவர்களுக்கான புத்தகங்கள,இளைஞர்களுக்கான புத்தகங்கள்,மகளிர்க்கான புத்தகங்கள்சட்டம், சமயம், தத்துவம், மருத்துவம், இலக்கியம், புத்தகங்கள்,

சுற்றுச்சூழல், உடல் நலம், மன நல புத்தகங்கள் என பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பயனர்கள் பயனடையும் விதமாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

 அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வாழும் வீட்டையே நூலகமாக மாற்றியுள்ளோம். மேலும்

திருச்சியில் மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்றஅனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறோம்.

இறந்தவரின் உடலை அவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களுக்கோ

 ஊருக்கோ உறவினர்க்கோ

தகவல் கொடுக்க முடியாமல் பெயர் விலாசம் தெரியாத உரிமை கோரப்படாத உடல்கள் ஏராளம். இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். மரணம் ஒன்று தான். சம்பவங்கள் பல. இதன் வலியும் வேதனையும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஆதரவற்ற அனாதை பிரேத நல்லடக்க பணியினை மனைவி, மகளுடன் செய்யும் போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். இவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை மலர்மாலை அணிவிக்க யாருமில்லை இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை. பிரேதத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.‌இறந்த நபருக்கு ஒரு மகன் இருந்தால் ஒரு மகள் இருந்தால் ஒரு பேத்தி இருந்தால் என்ன செய்வார்களோ அப்பணியினை நாங்கள் செய்கிறோம். மனைவி மகள் இருவரும் இயன்ற பொழுது நல்லடக்க பணியில் ஈடுபடுவார்கள்.கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். மேலும் இருபத்தைந்து முறைக்கு மேல் குருதிக்கொடை அளித்துள்ளேன். வாழ்நாளிற்கு பிறகு படமாய் இருப்பதை விட படமாய் இருப்போம் என எனது உடலினை தானமாக வழங்க உறுதியேற்று மனைவி மகள் ஒப்புதழுடன் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளேன் என்றா ர்.

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision