திருச்சியில் 2 நபர்களிடமிருந்து 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சியில் 2 நபர்களிடமிருந்து 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான இருந்த நபரை அதிகாரிகள் சோதனை செய்த போது பேஸ்ட் வடிவத்தில் 555.00 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 26.29 லட்சம் ஆகும்.

இதே போன்று அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியிடமிருந்து 697.500 கிராம் எடையுள்ள ரூ. 33.04 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 59 லட்சம் ஆகும். மேலும் கும்பகோணத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn