திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வங்கி ஊழியர் பலி

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வங்கி ஊழியர் பலி

கேரளா மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் அனுராக் சங்கரன்குட்டி. இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு செல்வதற்காக நேற்று இரவு அனுராக் சங்கரன்குட்டி தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே கொணலை என்ற இடத்தில் இன்று அதிகாலை வந்தபோது அனுராக் சங்கரன்குட்டி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த அனுராக் சங்கரன்குட்டி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த சிறுகனூர் போலீசார் அனுராக் சங்கரன்குட்டி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision