திருச்சி அருகே அரசுப் பேருந்து சிலிண்டர் லாரி மீது மோதி விபத்து

திருச்சி  அருகே  அரசுப் பேருந்து  சிலிண்டர் லாரி மீது மோதி விபத்து

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மணிகண்டம் அம்பேத்கர் நகர் அருகே   முன்னே சென்ற காலி சிலிண்டர் ஏற்றி சென்ற  லாரி திடீரென வேகத்தை குறைத்ததால் லாரியின் பின்பக்கம் மோதி அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.அரசு பேருந்து ஓட்டுனர் காலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிறு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision