திருச்சியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு பங்கு பெறக்கூடிய மாபெரும் பயிலரங்கம்

திருச்சியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு பங்கு பெறக்கூடிய மாபெரும் பயிலரங்கம்

திருச்சியில் Ruah Life Science International சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர்களோடு பங்கேற்கும் பயிலரங்கம் நடைபெற உள்ளது. வருகிற (22.10.2023) அன்று திருச்சி ஜோசப் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வளமான சிந்தனை மாற்றத்திற்காக மதிப்பளிப்போம் என்ற தலைப்பில், எதிர்காலத்தில் தாங்கள் யாராக இருக்கப் போகிறார்கள். துல்லியமாக மாணவர்கள் விரும்பும் மதிப்பெண் பெறுதல், (மைண்ட் புரோகிராமிங்) ஒவ்வொரு மாணவர்களிடம் இருக்கக்கூடிய தனித்துவமான ஆற்றலை அறிந்து கொள்ளகொள்ள, வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் அடைந்து முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்க்கான வழி முறைகள்,

பெற்றோர்களிடத்திலும், பிற மனிதர்களிடத்திலும் உறவுகளின் வலிமைகள், தொழில்நுட்பங்களும், தொழில்நுட்ப மன அழுத்தங்களும், சவால்களை எதிர் கொள்ளும் திறன், தேர்வு நேரங்களில் நினைவாற்றல் மேலாண்மை, கண்ணுக்கு புலப்படா கருவிகளின் பயன்பாடுகள், ஆன்மீக உளவியல் அறிவியல் யுத்திகள். செல்வந்தக் கலை போன்ற தலைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஆளுமைகளின் கருத்துக்கள் மாணவர்களுக்கு புரியும் படி எளிய தமிழில் நடைபெறும். 

மாணவர்கள் வாழ்க்கையில் சாதிக்கும் ஆற்றலை தூண்டவும், சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட உதவும். மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பொதுத்தேர்வுகள் (NEET, JEE, IIT) மற்றும் போட்டித் தேர்வுகளை எழுத கண்ணுக்கு புலப்படாத கருவிகளை கொண்டு ( தேர்வு ஒரு கலை) மனப்பான்மையை உருவாக்க செய்தல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்படும். 

தேனீர், மதிய உணவு, சான்றிதழ், கையேடு, புத்தக பரிசு, நுழைவுக் கட்டணம் - ரூபாய் 2000. (15.10.2023) தேதிக்கு முன் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் ரூபாய் 999. குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே, விரும்பும் பெற்றோர்கள், மாணவர்கள். கீழ்கண்ட (வாட்ஸ் ஆப்) இணைப்பில் இணைந்திடுங்கள். தேதி - 22.10.2023, நேரம் - 10:10 am. இடம் : புனித ஜோசப் கல்லூரி திருச்சி.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision