பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

கடந்த (28.06.23)-ந் தேதி கண்டோன்மென்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பெறப்பட்ட தகவலின்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று சோதனையிட்டதில் ஸ்ரீரங்கம் மல்லியம்பத்து பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (35), த.பெ.காமராஜ் என்பவர் மூன்று பெண்களை வைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்து, அவர்மீது பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களும் மீட்கப்பட்டு அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில், எதிரி ஸ்ரீதர் மீது கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஏற்கனவே பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இரண்டு வழக்குகளும், தில்லைநகர் காவல்நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

எனவே எதிரி ஸ்ரீதர் என்பவர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கொடுங்குற்ற விசாரணைபிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) விபச்சாரத்தடுப்பு பிரிவு ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரி ஸ்ரீதர் மீதான குண்டர் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision