பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த (22.04.23)-ந் தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகரை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமி விடுமுறையில் துவரங்குறிச்சி, புழுதிப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தபோது, தாத்தா வீட்டிற்கு அருகில் வசிக்கும் 25 வயது மதிக்கதக்க நபர் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியும்,

பின்னர் எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகரில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு வந்து, அச்சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரின்படி விசாரணை மேற்கொண்டதில், துவரங்குறிச்சி, புழுதிப்பட்டியில் வசிக்கும் எதிரி பால்ராஜ் என்பவர் இக்குற்றச்செயலில் ஈடுப்பட்டது தெரியவந்தது. எனவே அவர்மீது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தும், எதிரியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிரி பால்ராஜ் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு அவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn