தீப்பெட்டி சின்னத்திற்கு அமைச்சர் அன்பில்மகேஸ் தீவிர வாக்குசேகரிப்பு

தீப்பெட்டி சின்னத்திற்கு அமைச்சர் அன்பில்மகேஸ் தீவிர வாக்குசேகரிப்பு

திருச்சி கிழக்குத் தொகுதி பொன்மலை, அரியமங்கலம் பகுதிகளில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு ! 

திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரம், கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில் பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ் ஜெயக்குமார்  

 முன்னிலையில் பொன்மலை மற்றும் அரியமங்கலம் பகுதி , ஜெயில்கார்னர் சுப்பிரமணியபுரம், முதலியார் சத்திரம், செந்தனியபுரம், மகாலட்சுமி நகர், வரகனேரி, வரகனேரி, பஜார் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

        

 

          இந்நிகழ்வில் பகுதி பொறுப்பாளர்கள் மூக்கன் ராஜேஸ்வரன் மாமன்ற உறுப்பினர் லீலாவேலு மாநகரத் துணைச் செயலாளர் சரோஜினி வட்டகழக செயலாளர்கள் மனோகர் மாரிமுத்து ஜமால் ராஜேந்திரன் செல்வம் ரெங்கன் கதிர்வேல் சாகுல் கருப்பையா மற்றும் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

               

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் உரை !

       திராவிட மாடல அரசின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறியும் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை எடுத்துக் கூறியும் குறிப்பாக இப்பொழுது வரை இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் சரியான வாக்கினை இந்திய கூட்டணி வேட்பாளர் துரை வைகோ அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் உங்களது பெரும்பான்மையான வாக்குகளை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision