உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது

 திருச்சி உறையூர் நகரில் அரசு செய்யும் வெக்காளியம்மன் திருக்கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது ...

சோழ நாட்டின் தலைநகர் என்று அழைக்கப்படும் உறையூரில் கோபுரங்கள் இன்றி வெட்ட வெளியில் வீற்றிருக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலமாக பார்க்கப்டுகிறது.

உறையூரில் மணல் மழை பொழிந்த போது இந்த அம்மன் நகரையும் - மக்களையும் காப்பாற்றியதாக ஸ்தல வரலாற்றில் கூறப்படுகிறது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வெக்காளியம்மன் கோவிலில் வருடம் தோறும் சித்திரை வருடப்பிறப்பன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் எந்த ஆண்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை தேர் திருவிழாவில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

வெக்காளியம்மன் ஆலயத்தின் தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிர கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் - அக்னி சட்டி, அழகு போன்ற நேர்த்திக்கடனை எடுத்து வந்து வழிபட்ட னர்.