திண்ணையில் ஒளிந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு - கணவன், மனைவி கைது

திண்ணையில் ஒளிந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு - கணவன், மனைவி கைது

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூரை சேர்ந்தவர் துரைசாமி மகன் பழனிமுருகன் (25). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தெரு வழியாக நடந்து சென்றபோது தெருநாய் ஒன்று அவரை துரத்தியுள்ளது. இதனால் பயந்து போன பழனிமுருகன் அருகில் இருந்த சீனிவாசன் வீட்டு திண்ணையில் ஓடி ஒளிந்துள்ளார்.

அப்போது சீனிவாசன் அவரது மனைவி தேன்மொழி வெளியே வந்து பார்த்தபோது பழனி முருகன் திண்ணையில் அமர்ந்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசனுக்கும் அவரது மனைவி தேன்மொழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் இதுகுறித்து கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படவே இந்த பிரச்சினைக்கெல்லாம் காரணம் பழனிமுருகன் தானே என ஆத்திரமடைந்த கணவன், மனைவி இருவரும் பழனிமுருகன் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனிமுருகனை திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கணவன், மனைவி இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision