புனித நூலாக ஐ.நா அறிவிக்க கோரி ஓலைச்சுவடிகளில் எழுதி சாதனை

புனித நூலாக ஐ.நா அறிவிக்க கோரி ஓலைச்சுவடிகளில் எழுதி சாதனை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் பெ.சித்ரா இளஞ்செழியன். நேற்று உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு 133 பனை ஓலையில்,1330 திருக்குறளை எழுதும் சாதனையை காலை 9:03 மணிக்கு தொடங்கி இடைவிடாது தொடர்ந்து இரவு 10.33 மணிக்கு எழுதி முடித்தார்.

இதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம் 13 மணி 30 நிமிடம் ஆகும். 1.5 அடி அகலம் உள்ள பனை ஓலையில் 1330 திருக்குறளை எழுதி புதிய சாதனையை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்.... தற்பொழுது திருக்குறள் உலகப் பொதுமறையாக இருப்பினும் உலகப் புனித நூலாக உலக நாடுகள் ஐக்கிய சபையான ஐநா அறிவிக்க வேண்டியும், இதனை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்பணியை செய்து முடித்துள்ளேன் என தெரிவித்தார்.

இவரது சாதனையை கண்காணிப்பாளராக சாதனையாளர் வெங்கடேசன் முன்னின்று கண்காணித்தார். பள்ளி முதல்வரின் இத்தகைய சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பள்ளி முதல்வரின் புதிய சாதனையை அறிந்த பள்ளி ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் பள்ளி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision