மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

திருச்சிராப்பள்ளி மாநகர் உறையூர் கிழக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டதுஇப்பள்ளி உறையூர் குறத்தெரு 23 வார்டுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது , இப்பள்ளி சுமார் 65 வருடங்களுக்கு முன்னால் துவங்கப்பட்ட பள்ளியாகும், இப்பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்படுகிறது ,இப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது, இவ்விழாவில் அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார் தலைமையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலையில், மல்லிகா பெரியநாயகி வட்டார கல்வி மேற்பார்வையாளர், மற்றும் சிந்துஜா பள்ளி மேலாண்மை குழு தலைவி, கல்பனா தேவி உதவி தலைவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

 பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நடன நிகழ்ச்சி ஓட்டப்பந்தயம் ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் இதில் ஆசிரியர்கள் மேரி கிரேஸ், செசிலி, அமுதா, ரம்யா, தாரணி , லதா மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் திரளாக பங்கேற்று ஆண்டு விழாவை வெகுவாக சிறப்பித்தனர்.