திருச்சி மாவட்டத்தில் நாளை (30.01.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (30.01.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம், சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (30.01.2024) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டுர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, பாலையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ஜி.கே.பார்க், ரெட்டிமாங்குடி, கொளக்குடி, கண்ணாக்குடி, புஞ்சைசங்கேந்தி, குமுளூர், தச்சங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை (30.01.2024) காலை 9:45 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (30.01.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இம்மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கே.கே.நகர், இந்தியன் பாங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்எம்இஎஸ்சி காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்ஐசி காலனி, பழனிநகர், முல்லைநகர், ஆர் விஎஸ் நகர், வயர்லெஸ்ரோடு, செம்பட்டு பகுதி குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே. நகர், சந்தோஷ்நகர், ஆந்த்நகர், கே.சாத்தனூர், ஓலையூர், வடுகப்பட்டி, மன்னார்புரம், காஜா நகர், சிம்கோ காலனி, இச்சிக்காமலைப்பட்டி, ஆர்.எஸ்.புரம், டிஎஸ்என் அவென்யூ, அகிலாண் டேஸ்வரிநகர் ஆகிய பகுதிகளில் நாளை (30.01.2024) காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (30.01.2024) பராமரிப்பு பணி நடக்கிறது .இதனால் வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பப்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, ரெட்டியப்பட்டி, முள்ளிப்பாடி, தொப்பநாயக் கன்பட்டி, இடையப்பட்டி, கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, என்.புதூர், தாமஸ்நகர், அஞ்சல் கரான்பட்டி, இளங்காக்குறிச்சி, ஆவாரம்பட்டி, ஆலத்தூர், குரும்பப்பட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலகல்பட்டி, புதுக்கோட்டை,

மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, இனாம் ரெட்டியபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூர், புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிப்பட்டி, பொன்னணியாறு டேம் உள்ளிட்ட பகுதியில் நாளை (30.01.2024) காலை 09:45 மணி முதல் மாலை 03:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision