நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி பகுதி மக்கள், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் திருவெறும்பூர் வழியாக குத்தைபார் பேரூராட்சி வரை அரசு மாநகர பேருந்து இயக்க கோரி கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சத்திரம் பேருந்து நிலையம் முதல் திருவெறும்பூர் வழியாக கூத்தைப்பார் வழித்தடத்தில் புதிய மாநகர அரசு பேருந்தை மக்களின் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட குழு துணைத்தலைவரும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கருணாநிதி கூத்தைப்பார், பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேல்,

போக்குவரத்து கழக அதிகாரிகள் பொது மேலாளர் சக்திவேல், கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், கிளை மேலாளர் பால் கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.