திருச்சி மாவட்டத்தில் நாளை (30.09.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (30.09.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பூவாளுர் 110/33-11கிவோ துணை மின் நிலையத்தில் நாளை (30.09.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் இலால்குடி நகர் பகுதி, அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார் கோவில்தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர் மற்றும் நன்னிமங்கலம், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி,வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்காள், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்கலம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (30.09.2023) காலை 09:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் காத்தலும், திருச்சி மின்பகிர்மான வட்டம், இலால்குடி கோட்டம், பொறிஞர் K.அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.