குண்டும் குழியுமான நெடுஞ்சாலை - நூதன பொங்கலோ பொங்கல் கொண்டாடிய இளைஞர்கள்!!

குண்டும் குழியுமான நெடுஞ்சாலை - நூதன பொங்கலோ பொங்கல் கொண்டாடிய இளைஞர்கள்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் நடுரோட்டில் கரும்பு வைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

பொங்கல் பண்டிகை கொண்டாடும் வேலையில் குண்டு குழியையை சரி செய்யப்படாத சாலையில் பள்ளத்தில் மூன்று கரும்புகளை வைத்து பொங்கல் வைப்பது போல் நூதன விழிப்புணர்வு பொங்கலை கொண்டாடியுள்ளனர்.

Advertisement

கரும்புகளை வைத்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துளள்ளனர். உடனடியாக அதிகாரிகள் சாலையை சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0