திருச்சியில் கார் விபத்து - போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில் கார் விபத்து - போக்குவரத்து பாதிப்பு

சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். அவரது மனைவி இருவரும் தேனியில் உள்ள திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கார்த்திகேயன் ஓட்டி வந்த சிப்ட் கார் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே பள்ளி விடை பெருவளை வாய்க்கால் பாலத்தில் வந்த போது முன்பக்கம் டயர் வெடித்து பாலக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் எவ்வித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் போலீசார் சாலையில் கடந்த காரை மீட்டு அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை செல்லும் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக காத்திருந்து சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision