ஊரடங்கு விதிமுறையை மீறிய 17,300 பேர் மற்றும் 86 வணிக வளாகம் மீது வழக்கு பதிவு 

ஊரடங்கு விதிமுறையை மீறிய 17,300 பேர் மற்றும் 86 வணிக வளாகம் மீது வழக்கு பதிவு 

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு 
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே 
தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு 20.04.2021 முதல் அமலில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு 25.04.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் உத்தரவை மீறி முகக்கவசம் 
அணியாத 16,500 நபர்கள் மீதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 800
நபர்கள் மீதும் நெறிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக வளாகங்கள் 26 மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் அரசாணையினைப் பின்பற்றி திருச்சி மாநகரத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க திருச்சி மாநகர காவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். பொதுமக்கள் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுமாறு 
கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கேட்டுக்கொள்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAg