ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர் முகூர்த்த கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர் முகூர்த்த கால் நடப்பட்டது

ஸ்ரீ நம்பெருமாள் விருப்பன் ( சித்திரை தேர்) திருநாளில் திருத்தேருக்கு ஸ்தம்ப ஸ்தாபனம்  (முகூர்த்த கால்நடுதல் ) நிகழ்ச்சி இன்று பங்குனி மாதம் -27 ஆம் தேதி (10.04.2023) திங்கட்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சுபயோகம் கூடிய சுப தினத்தில் காலை 10.00 மணியிலிருந்து 10.30 மணிக்குள்  மிதுன லக்னத்தில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் கண்காணிப்பாளர்கள் கோபல கிருஷ்ணன்  சரண்யா வெங்கடேசன்  உதவி கண்காணிப்பாளர் மோகன்  மணியக்காரர் ஸ்ரீதர்  நிலப்பிரிவு பாலசுப்பிரமணியன்  கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn