தோழர். ம.சிங்காரவேலர் நினைவு தினம்

தோழர். ம.சிங்காரவேலர் நினைவு தினம்

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், மே தினத்தை சென்னையில் கொண்டாடியவர். சென்னையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் தோழர். ம.சிங்காரவேலர் நினைவு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா தலைமையில் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் தோழர் ம.செல்வராஜ் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அவரின் புகழை பற்றி உரையாற்றினார்.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் டாக்டர். R. சாந்தி ஆகியோரும் அவரது நினைவை போற்றினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் C. செல்வகுமார், பொருளாளர் சொக்கி . சண்முகம்,பகுதி குழு செயலாளர்கள் இரா. சுரேஷ் முத்துச்சாமி, ச.பார்வதி, அ. அஞ்சுகம் மாணவர் பெருமன்ற மாநில தலைவர் க. இப்ராஹிம், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் M.சுமதி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் M. செல்வகுமார், சூர்யா, அன்பழகன், ஜெய்லானி, ஆனந்தன், ஈஸ்வரி, ராஜேந்திரன், P.துரைராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision