திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காலியாக உள்ள 80 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 11.04.2022 முதல் 13.04.2022 வரை, 18.04.2022 மற்றும் 20.04.2022 முதல் 23.04.2022 வரை திருச்சிராப்பள்ளி, பழைய கோழிப்பண்ணை வளாகம், கொட்டப்பட்டு, புதுக்கோட்டை மெயின் ரோடு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கால்நடைகளை நன்கு கையாள 
தெரிந்திருத்தல் வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருத்தல் வேண்டும்.

நேர்காணலுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு கடிதம் மூலம் நேர்காணலுக்கான அழைப்பாணை 
அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நேர்காணலுக்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெறாத விண்ணப்பத்தாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட இணையதள முகவரியான www.trichirappalli.nic.inஎன்ற இணையதள முகவரியில் அவர்களுக்கான நேர்காணல் தேதி மற்றும் நேரம் ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். நேர்காணலுக்கு வரும் விண்ணப்பத்தாரர்கள் அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் அழைப்பாணை கடிதம் மற்றும் தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள தகுதிகளுக்கான அனைத்து மூலச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை அசலுடன் நேர்காணலில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கான அழைப்பாணை கடிதம் இல்லாதவர்கள் நேர்காணல் நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என  திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்  சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO