திருச்சி மாநகரில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்.

திருச்சி மாநகரில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலைய, நீர்ப்பணி நிலையத்தில் பராமரிப்பு பணி (12.02.2024) மற்றும் (13.02.2024) ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், காஜாப் பேட்டை கண்டோன்மெண்ட்,

ஜங்ஷன், கல்லாங்காடு, தெற்கு ராமலிங்க நகர், ஆல்ஃபா நகர், மிளகுபாறை மற்றும் கருமண்டபம் ஆகிய பகுதிகளிலும், (13.02.2024) மற்றும் (14.02.2024) இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது (15.02.2024) முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision