திருப்பதியில் இருந்து நாளை ஸ்ரீரங்கத்திற்கு வஸ்திர மரியாதை...

திருப்பதியில் இருந்து  நாளை ஸ்ரீரங்கத்திற்கு   வஸ்திர மரியாதை...

 ஸ்ரீரங்கம் கோயிலில் கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள் , உற்ச்சவர் ஸ்ரீ நம்பெருமாள் , மூலவர் ஸ்ரீ தாயார், உற்ச்சவர் ஸ்ரீரெங்கநாயகித் தாயார்க்கு  திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதியவஸ்திரங்கள், புதிய குடைகள் கொடுப்பது வழக்கம்.

அதன்படி இவ்வாண்டு நாளை கார்த்திகை மாதம் 18-ம் தேதி (04.12.2022) கைசிக ஏகாதசியை  முன்னிட்டு நாளை 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை   காலை 7.00 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில்  புதிய   வஸ்திரங்கள், குடைகள் கொண்டு வந்து  ஸ்ரீரெங்கவிலாஸ் மண்டபத்தில்   இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பட்டு கருடாழ்வார் மண்டபத்தில்  ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் வழங்க உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

   

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO