திருச்சி அருகே திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை!

திருச்சி அருகே திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை!

புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மாத்தூரை சேர்ந்த பாலச்சந்தர்(36) மர்ம நபர்களால் அவரது வீட்டிலேயே வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாத்தூர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Advertisement

பாலசந்தருக்கு இந்த மாதம் 30 தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்று தெரிந்த பாலச்சந்திரன் காரை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றபோது மர்ம நபர்கள் காரிலேயே வைத்து பாலச்சந்திரனை வெட்டிப்படுகொலை செய்துள்ளனர்.

Advertisement