சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலின் காணிக்கை விபரம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலின் காணிக்கை விபரம்

 திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும்.

கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.

99 லட்சம் ரூபாய்

அப்போது கோயில் உண்டியலில் கடந்த 11 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.99 லட்சத்து, 31 ஆயிரத்து 723 ரொக்கமும், 1 கிலோ 772 கிராம் தங்கமும், 3 கிலோ 873 கிராம் வெள்ளியும், 230 அயல்நாட்டு நோட்டுகளும், 344 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்க பெற்றன என கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn