ஒரே இரவில் எட்டு வீடுகளில் திருட்டு

ஒரே இரவில் எட்டு வீடுகளில் திருட்டு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள எச் ஏ பி பி நிறுவனம் மத்திய படைகளன் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த தொழிற்சாலையை பணிபுரியும் தொழிலாளர்களுக்காக குடியிருப்புகள் உள்ளது. 24 மணி நேர செக்யூரிட்டி பாதுகாப்புகளுடன் அன்னியர்கள் உள்ளே நுழைய முடியாத வகையில் குடியிருப்புகளும் தொழிற்சாலையும் உள்ள நிலையில் மர்ம நபர்கள் 3 பேர் நேற்று இரவு உள்ளே நுழைந்துள்ளனர்.

அப்படி நுழைந்த மர்ம நபர்கள் டைப் 2 பகுதியைச் சேர்ந்த வர்ணன் (39), துப்பாக்கி ஊழியரான இவர் தனது மாமனாரை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில் வருணன் வீட்டில் அவரது மாமனார் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வந்து வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணத்தை எடுத்ததோடு மேலும் நகையை தேடிய பொழுது சத்தம் கேட்டு வர்ணனின் மாமனார் என்ன சத்தம் என சத்தமிட்டதை தொடர்ந்து அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் டைப் 3 சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (58) இவர் எச்ஏபிபி தொழிலாளர் இவரது மகனுக்கு அண்மையில் திருமணமாகி உள்ளது இதனால் இவர்கள் குடும்பத்துடன் கரூர் சென்றதாகவும் இந்த நிலையில் வீட்டிலிருந்து 25 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம்ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று காலை வந்து பார்க்கும் பொழுதுதான் கொல்லைபோனது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது மேலும் அவர்கள் டைப் ஒன் பகுதியில் பூட்டப்பட்டிருந்த மூன்று வீடுகளை டைப் 3 இல் இருந்த ஒரு வீடும் ஆள் இல்லாத நிலையில் அந்த வீடுகளை பூட்டை உடைத்து பார்த்துள்ளனர்.

அங்கே இருந்த வீடுகளில் குடியே இல்லாததால் எந்தவித பொருளும் கொள்ளையர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கே.வி பள்ளி குடியிருப்பு அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமணன் மற்றும் மேலும் ஒரு ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர் ஆனால் அங்கும் கொள்ளையர்களுக்கு எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவம் இன்று காலையில் தெரிவந்ததை தொடர்ந்து உடனடியாக எச் ஐ பி பி தலைமை பாதுகாப்பு அதிகாரி நவீன் குமார் திருச்சி எஸ் பி சுஜித் குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் நவல்பட்டு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து சென்றதோடு சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை பிரிவு போலீசார் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதேபோல் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று நின்றது. மேலும் அந்த பகுதியில் மொத்தம் 14 கண்காணிப்பு கேமரவையும் ஆய்வு செய்து பார்த்ததில் 5 கேமரா பதவில் சுமார் 18 முதல் 22 வயது மதிக்கத்தக்க 3 வட மாநில இளைஞர்கள் வருவது பதிவாகி உள்ளதாகவும், அவர்கள் மூன்று பேரும் மேல் சட்டை இல்லாமலும் இருவர் தலையில் துண்டு கட்டி உள்ளதாகவும், ஒருவர் மாஸ்க் போட்டுள்ளதாகவும், இவர்கள் கையில் புல் வெட்ட பயன்படுத்தப்படும் கத்தி மற்றும் லிவர் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வருவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் எச் ஏ பி பி குடியிருப்பு பகுதிக்கு ஒரே நுழைவாயில் தான் என்றும் இந்த குடியிருப்பில் 70 வீடுகள் காலியாக உள்ளது. மேலும் அந்நியர்கள் யாரும் உள்ளே வரவிடாமல் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும் மத்திய பாதுகாப்பு படைகள் தொழிற்சாலையின் குடியிருப்பு பகுதியிலேயே ஒரே நேரத்தில் 8 வீடுகளில் பூட்டை உடைத்து சம்பவம் பெ ரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn