திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு தனி வழி

திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு தனி வழி

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள் மட்டுமின்றி உள்நாடுகளுக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு நடைமுறைகள் முடித்த பிறகு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதனால் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் பகுதியில் அதிக அளவில் பயணிகள் நெரிசல் ஏற்படும் நிலை இருந்து வந்தது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சோதனை செய்வதற்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழி நேற்று (சனிக்கிழமை) முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த தனி வழியின் மூலம் பாதுகாப்பு நடைமுறைகளை முடித்து உடனடியாக விமானத்தில் பயணம் செய்வதற்கு செல்லலாம்.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn