மின் சேமிப்பு வார விழா

மின் சேமிப்பு வார விழா

திருச்சி மின் பகிர்மான வட்டம் / பெருநகரம் / திருச்சி சார்பில் (14.12.2023) முதல் (20.12.2023) வரை மின் சேமிப்பு வார விழா" சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு விழாவான (20.12.2023) (புதன்கிழமை) மதியம் 3:30 மணியளவில் ஜமால் முகமது கல்லூரி முன்பு பொறிஞர்.S.பிரகாசம், மேற்பார்வை பொறியாளர் / திருச்சி மின் பகிர்மான வட்டம் / பெருநகரம் திருச்சி அவர்கள் கொடியசைத்து மகா பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் காஜாமியான் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு பற்றிய பதாகைகளை ஏந்திக் கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இப்பேரணியில் திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், நிர்வாக மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியானது ஜமால் முகமது கல்லூரியிலிருந்து ஆரம்பித்து மேற்பார்வை பொறியாளர்/மன்னார்புரம்/மெட்ரோ/திருச்சி அலுவலத்தில் நிறைவு பெற்றது.

நிறைவு விழாவில் திருச்சி மண்டல பொறியாளர் பொறிஞர்.S செடியழகன் அவர்க கலந்து கொண்டு மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புமை ஆற்றினார். இப்பேரணியில் கலந்து கொண்ட காஜாமியான் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் திருச்சி மின் பகிர்மான வட்டம் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது இறுதியாக பொறிஞர் S.பிரகாசம் திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரம் திருச்சி மின் சிக்கனம் மற்றும் மின் சேமிப்பு குறித்து சிறப்புரையும், நன்றியுரையும் ஆற்றினார் இத்துடன் விழா  இனிதே நிறைவுற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision