இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!!

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறையில் உதவி ஆசிரியர், சுவடியில் வல்லுனர், கணினி வல்லுனருக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் - பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்:

துணை ஆசிரியர் - 1

சுவடியியல் வல்லுநர் - 1

கணினி வல்லுநர் - 2 (Indesign)

தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்) - 1

தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர் -1

மரபு ஓவிய புனரமைப்பாளர் - 1

ஆய்வுக் கூட உதவியாளர் - 1

ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் - 1

மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், மார்ச் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள், தபால் பெட்டி எண்: 3304, தி போஸ்ட் மாஸ்டர், நுங்கம்பாக்கம் MDO, ஹபிபுல்லா சாலை, (தி.நகர் வடக்கு தபால் அலுவலகம் மேல்மாடி) நுங்கம்பாக்கம், சென்னை - 34. என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க  வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision