சொத்துத் தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு - ஒருவர் உயிரிழப்பு

சொத்துத் தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு - ஒருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி சேர்வை மகன் முருகேசன் (37). இவர் திருப்பூரிலுள்ள அலுமினிய நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முருகேசன் குடும்பத்தினருக்கும் அவரது பெரியப்பா ராஜா சேர்வை குடும்பத்தினருக்கும் சுமார் 4 ஏக்கர் விளைநிலங்களில் இருந்த சொத்து பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும்  இந்நிலையில் திருப்பூரில் இருந்து முருகேசன் தனது வீட்டுக்கு சனிக்கிழமை வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விளைநிலத்தில் மின்மோட்டார் போடுவதில் இரு தரப்பினருக்கும் அப்போது முருகேசன் மற்றும் அவரது சகோதரர் கருப்பையா (38), மாமனார் பிச்சை (50) ஆகியோரை ராஜா சேர்வை தனது மகன்களான பாலையா (37), செல்லதுரை, பொன்னுசாமி (எ) குஞ்சான் ஆகியோருடன் சேர்ந்து வெட்டினாராம். இதில் காயமடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 ஆனால் வழியிலேயே முருகேசன் உயிரிழந்தார். பிச்சை, கருப்பையா ஆகியோர் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸார் முருகேசன் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். தலைமறைவான பெரியப்பா, அவரது மூன்று மகன்களை போலீசார் தேடுகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision