தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து- 4பேர் பலி

தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து- 4பேர் பலி

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் முரளி ஆகியோர் வாடகை காரில் தென்காசியில் உள்ள வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்பதற்காக சென்று உள்ளனர்.

பின்னர் திருச்சி நோக்கி திரும்பி வரும் போது தங்கள் நண்பர்கள் இருவரை மதுரையில் காரில் ஏற்றி உள்ளனர்.

இந்நிலையில் விராலிமலை அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் உயிர்பிழைத்த ரவிச்சந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டுநர் உள்ளிட்ட மற்ற நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்கப்பட்ட நான்கு பேரின் உடல்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் உயிரிழந்த திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த முரளி, சுரேஷ் பெயர்கள் தெரியவந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn