கோடிக்கணக்கில் மோசடி - ப்ரணவ் ஜுவல்லரி உரிமையாளர் கைது.

கோடிக்கணக்கில் மோசடி - ப்ரணவ் ஜுவல்லரி உரிமையாளர் கைது.

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, புதுச்சேரி உள்ளிட்ட 8 இடங்களில் பிரணவ ஜுவல்லரி ஸ்ரீ கடை செயல்பட்டு வந்தது. இதன் விளம்பர தூதுவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகைகள் ராதிகா, சைத்ரா ரெட்டி ஆகியோர் இருந்தனர்.

இந்த நகைக் கடைகளின் உரிமையாளர்களான மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மாதாந்திர நகைச் சீட்டு நடத்தியும், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தனர். மாதாந்திர சீட்டு முதிர்வு காலம் முடிந்த பிறகு நகை கேட்ட போது ஏதோ ஒரு காரணம் சொல்லி சமாளித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளை முற்றுகையிட்டனர். பின்னர், போலீசாரின் அறிவுரையை ஏற்று பாதிக்கப்பட்டவா்கள் அந்தந்த மாவட்ட போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் அனைத்து நகை கடைகளையும் மூடி விட்டு அதன் உரிமையாளர்களான மதனும், அவரது மனைவி கார்த்திகாவும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ஜுவல்லரி உரிமையாளரான மதன் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கார்த்திகா, முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசாரால் மதனின் மனைவி கார்த்திகா இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision