திருச்சியில் கனமழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

திருச்சியில் கனமழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து உள்ள தேவராயநேரி புதுத்தெரு பகுதியில் 65 வயதான துரைராஜ் மற்றும் அவரது மனைவி மீனம்பாள் அவ்வீட்டில் குடியிருந்து வருகின்றனர். கூலி வேலை செய்யும் இவரகள் இன்று மாலை வீட்டில்

இருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் இருவருக்கும் எந்த காயமும் இல்லை. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர்  துரைராஜ் மற்றும் மீனம்பாள் பத்திரமாக மீட்டு உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision