திருச்சி விமான நிலையத்தில் 1கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 1கோடி மதிப்புள்ள  தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவர் தனது ஆசனவாயில் மறைத்து 995.5 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

60 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பேன்ட்ல் மறைத்து கடத்திவரப்பட்ட 47 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்க பிஸ்கட் மற்றும் 94 கிராம் தங்க நகைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision