திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் தங்கநகை, 344 கிராம் வெள்ளி, பணம் திருட்டு.

திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் தங்கநகை, 344 கிராம் வெள்ளி, பணம் திருட்டு.

திருச்சி மாவட்டம் முசிறி பாரிவள்ளல் நகரை சேர்ந்தவர் அசோக் (42). இவர் 18ஆம் தேதி தனது உறவினர் ராஜ் என்பவர் வால்பாறையில் இறந்து போன துக்க நிகழ்விற்கு சென்று விட்டு 21ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது முன்பக்க கதவை திறந்து பார்த்தபோது பின்பக்கம் மரக்கதவு மற்றும் இரும்பு கேட் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது பெட்ரூம் கதவுகள் உடைக்கப்பட்டு இரும்பு பீரோவில் இருந்த 10 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 344 கிராம் வெள்ளிப் பொருட்கள், பணம் 14000 திருடு போனது குறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருடு போன பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் ஆகும்.

இந்த புகாரின் பேரில் தடயவியல் துறை ஆய்வாளர் அச்சுதன் தலைமையில் வந்த நிபுணர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் காவேரி வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களை மோப்பம் செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும் முசிறி காவல் உதவி ஆய்வாளர் திருப்பதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் பாரி வள்ளல் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision