சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு - நீதிமன்ற காவலுக்கு நீதிபதி மறுப்பு

சவுக்கு சங்கர்  ஜாமினில் விடுவிப்பு - நீதிமன்ற காவலுக்கு நீதிபதி மறுப்பு

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை பற்றி தவறாக பேசி நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை சிறையில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறியதை அடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

திருச்சயில் அவர் மீது முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணைக்காக இன்று சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டு தொடர்ந்து கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். சவுக்கு சங்கர் இந்த வழக்கில் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற காவலுக்கும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா அனுப்பவில்லை. மீண்டும் புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர்தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ்..... மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக ஏற்கனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்கு கடந்த 4ம் தேதி அந்த வழக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எங்கள் தரப்பில் ஆட்சபனை தெரிவித்தோம் ஒரு வழக்கில் ஆதாரம் இருந்தால் அதற்காக கைது செய்யலாம் ஒரு குற்றத்திற்காக பல வழக்குகள் போடக்கூடாது என என பல்வேறு உதாரணங்களை எடுத்து கூறினோம். 

ஒரு வழக்கில் ஒரு புகார்தாரர் புகார் கொடுத்த பின்பு வேறு புகார் அந்த வழக்கு தொடர்பாக வந்தால் அந்தப் புகார்தாரர் சாட்சியாக தான் சேர்க்க வேண்டும். புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது என இருந்த வழக்கை உதாரணமாக எடுத்து வாதிட்டோம். நீதிபதி கேட்டு அறிந்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தள்ளுபடி செய்தார். மேலும் சொந்த ஜாமீன் விடுவிப்பதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே இந்த வழக்குக்கு அவர் ஜாமீன் கேட்க தேவையில்லை. இனி விசாரணைக்கு ஆஜரானால் மட்டும் போதும். திருச்சி பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் இருக்கும்போது அவருக்கு கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சென்னை புழல் சிறையில் எந்தவித மருத்துவம் வழங்கப்படவில்லை. கோவை சிறையிலிருந்து எந்த மருத்துவ சான்றிதழும் வரவில்லை என மறுத்துவிட்டனர். இதுகுறித்து நீதிபதியிடம் முறையிட்டார் இதை பரிசிலீப்பதாக நீதிபதி தெரிவித்தார் என கூறினார். தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் மீண்டும் சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision