திருச்சியின் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பிரச்சாரம்

திருச்சியின் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பிரச்சாரம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்களை நோக்கி ஏழு முனை பிரச்சார பயணம் - திருச்சியின் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பிரச்சாரம்!

அரசு ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிவரன்முறை செய்து 41 மாத ஊதியத்தை வழங்கிட வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4.30 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் பிரச்சார வாகனங்கள் மூலம் அரசு அலுவலகங்களை நோக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இன்று திருச்சி மாவட்டத்தின் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு வந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO