திருச்சியில் நாளை (26.02.2024) குரூப்-4 மாதிரி தேர்வு

திருச்சியில் நாளை (26.02.2024) குரூப்-4 மாதிரி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்பு தேர்விற்கான மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை ( 26.02.2024 திங்கட்கிழமை காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வில் 8-ம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், 2023-ம் ஆண்டு அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் மற்றும் கணிதம் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி ஆகிய பாட பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம் பெறும். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.

மாணவர்களுக்கு வினாத் தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர்-விடைத்தாளில் பதில் அளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்க ளுக்கு மதிப்பெண் அதிகப்படுத்தவதற்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணைய குரூப் - 4 தேர்விற்கு தயார் செய்யும் மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருச்சி மாவட்ட மைய நூலகம் முதல் நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision