திருச்சியில் 2 நாட்கள் அமைச்சர் உதயநிதி

திருச்சியில் 2 நாட்கள் அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் நாளை (31.07.2024) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் விபரம்.

1) மாலை 03:00 மணியளவில் நம்பர் 1 டோல்கேட் அருகில் புகழினி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார். 

2) மாலை 03:15 மணியளவில் திருவெறும்பூர் ஒன்றியம்,காட்டூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அங்கூரன் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

3) மாலை 03:45 மணியளவில் திருவெறும்பூர் வட்டம் சூரியூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்கிற்கு இடம் தேர்வு செய்ய அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

4) மாலை 05:00 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூரில் பணிகள் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

5) மாலை 05:15 மணியளவில் திருச்சிராப்பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி விழாப் பேருரையாற்ற உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision