காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோட்டம்!!

காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோட்டம்!!

Advertisement

திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் செங்குளம் கோயில் தெரு பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட ராஜேஸ்வரி - தவசி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

Advertisement

தவசி உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார், ராஜேஸ்வரி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை எழுந்துள்ளது என கூறப்படுகிறது.

Advertisement
 
இதனால் நள்ளிரவில்  கணவர் தவசி ராஜேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.