30வது வார்டில் சாலையில் செல்லும் பாதாள சாக்கடை நீர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்

30வது வார்டில் சாலையில் செல்லும் பாதாள சாக்கடை நீர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்

திருச்சி மாநகராட்சி 30வது வார்டிற்கு உட்பட்ட ரெங்கசாமி செட்டியார் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் பின்புறம் உள்ள ஶ்ரீ கருப்பண்ணசாமி வாசலில் அருகே உள்ள பாதாள சக்கரை அடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கழிவு நீர் வெளியேறுகிறது.

சாலையில் வழிந்து ஓடும் இந்த கழிவு நீரால் துர்நாற்றம் வீசி கொசு உற்பத்தியாகிறது. பராமரிப்பு இல்லாமல் கடந்த இரு மாதங்களாக பாதாள சாக்கடை நிரம்பி தெருக்களில் ஓடுகிறது.

இந்த வார்டு கவுன்சிலர் கதிஜாபானு அவர்களிடம் தெரிவித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO