திருச்சி ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பள்ளப்பட்டியில் நேற்று (23.01.2021) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் 21 பேர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயம் அடைந்தனர்.

இதில் 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப் பட்டியை சேர்ந்த சசி கில்பர்ட் (21) என்ற மாடுபிடி வீரர் மாடு நெஞ்சில் உதைத்ததில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn