மணப்பாறை அருகே மக்களை தேடி நிகழ்ச்சியில் கரூர் எம்பி ஜோதிமணி பங்கேற்பு

மணப்பாறை அருகே மக்களை தேடி நிகழ்ச்சியில் கரூர் எம்பி ஜோதிமணி பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி பகுதியிலான பொத்தமேட்டுப்பட்டி, செவலூர், விடத்தலாம்பட்டி, தீராம்பட்டி, மஞ்சம்பட்டி, நொச்சி மேடு, திண்டுக்கல் ரோடு, மதுரை ரோடு காந்திநகர் எடத்தெரு, அண்ணா நகர் அண்ணாவி நகர் காந்தி சிலை, விராலிமலை ரோடு உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களையும் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளையும் எம்.பி.ஜோதிமணி பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சியாமளா தேவி, நகராட்சி கட்டிட வரைபட அலுவலர் வெங்கடேஷ்,திமுக நிர்வாகிகள்நகர திமுக செயலாளர் மு.ம.செல்வம், நகர கழக நிர்வாகிகள் ஜான் பிரிட்டோ, செவலூர் கண்ணன், பால்பாண்டி, கார்த்திகேயன், பால்ராஜ், பந்தல் முருகேசன் வட்ட கழக நிர்வாகிகள் மு.ம.முத்து, தமிழரசன், பிரவின் பாண்டியன்,அன்னை ராபர்ட், அரவிந்தன்,

சண்முகவேல், செவலூர் தமிழரசன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நகர தலைவர் எம்.ஏ. செல்வா, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், நகர துணை செயலாளர் பாவா இளங்கோ இளைஞரணி ராம்பிரகாஷ், மொண்டிப்பட்டி ராஜேந்திரன், மதிமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், நகர செ யலாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் எம்.பி யிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

Https://www.threads.net/@trichy_vision

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn