பாதை ஆக்கிரமிப்பு - பசு மாடுகளுடன் சாலை மறியல்

பாதை ஆக்கிரமிப்பு - பசு மாடுகளுடன் சாலை மறியல்

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் பெட்டவாய்த்தலை கிராமம் தேவஸ்தானம், எல்லக்கரை பகுதியில் R800 சொசைட்டி பால் கறவை நிலையம் உள்ளது. இங்கு பால் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனை அகற்ற கோரி திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் கறவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் K.C. பாறயன் தலைமையில் ஸ்ரீரங்கம் வட்டாசியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று மாலை 4:00 மணிக்கு பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெறும் உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision