புகையிலை வியாபாரிகளுடன் தொடர்பு - திருச்சி காவலர் பணியிடை நீக்கம்

புகையிலை வியாபாரிகளுடன் தொடர்பு - திருச்சி காவலர் பணியிடை நீக்கம்

திருச்சி மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில், புகையிலைப் போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுபோல சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரும் எனவும் என மாநகர காவல் ஆணையர் என்.காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முதன்மை நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் முகவர்களிடம் தொடர்பு வைத்திப்பதாக தகவல் வந்தது.

இதுக்குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் ஆணையர், காளிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision