மசாஜ் சென்டர் எனும் பெயரில் பாலியல் தொழில்... குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

மசாஜ் சென்டர் எனும் பெயரில் பாலியல் தொழில்... குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

கடந்த 13.03.22-ந்தேதி அண்ணாசிலை அருகே உள்ள சாரா லாட்ஜில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக ஒருவர் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட லாட்ஜில் சோதனை செய்தபோது எதிரிகள் கலைஞர் வயது 37, வில்பிரட் மார்ஷெஷலின் வயது 40, ஆகியோர்கள் இரண்டு இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடனே எதிரிகளை கைது செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் சிறையிலடைக்கப்பட்டார்.

மேற்படி எதிரிகள் கலைஞர் மற்றும் வில்பிரட் மார்ஷெலின் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரனையில் தெரிய வருவதாலும், மேற்படி குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். 

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகள் மீது குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்தும் மேற்படி எதிரிகள் கலைஞர் மற்றும் வில்பிரட் மார்ஷெலின் ஆகியோர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO