துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பிரச்சாரம்

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பிரச்சாரம்

திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு சகோதரர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் முன்னிலையில், 

திருச்சி கல்லுக்குழியில், 

இன்று (08.04.2024) காலை 8 மணியளவில், 

திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள், இன்றைய பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்து, என்னை ஆதரித்து தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு உரையாற்றினார்.

நிகழ்வில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திமுக திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி.சேரன், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட திமுக, மதிமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision