திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் வரை, பேருந்து இயக்கத்தை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் தகே.என்.நேரு, இன்று (19/08/2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி, திருச்சிராப்பள்ளி விமான நிலைய இயக்குனர் கோ. கோபாலகிருஷ்ணன்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் (வணிகம்) புகழேந்தி ராஜ், உதவி மேலாளர் ( தொழில்நுட்பம்) ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision