திருச்சி புனித பாத்திமா பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற துவக்க விழா!

திருச்சி புனித பாத்திமா பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற துவக்க விழா!

திருச்சி, புத்தூர், புனித பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர் மன்ற துவக்க விழா மற்றும் நூற்றாண்டு விழா பற்றிய சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தாளாளர் அருட்சகோதரி. சாந்தி தலைமை தாங்கினார். உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி. அருள் மேரி* அவர்கள் முன்னிலை வகித்தார். ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி. ஸ்டெல்லா அனைவரையும் வரவேற்றார்.

நூற்றாண்டு கடந்து சிறப்பிக்கும் பாத்திமா பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் நினைவலைகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், நூற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவர் மன்ற அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும், பள்ளி கோரும் கோரிக்கைகளை நிறைவேற்ற

இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் மன்ற அமைப்பு முறையாக துவங்கப்பட்டு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னாள் மாணவர் மன்ற அமைப்பின் செயலராக ஜோ.அற்புத சகாயராஜ், இணைச் செயலராக சங்கீதா, பொருளராக ஷேக், துணைப் பொருளராக செபாஸ்டின் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆசிரியைகள் செல்வி கூட்டத்தை வழிநடத்தினார். ஆசிரியை. நிர்மலா கலந்துரையாடல் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ஆசிரியை. விக்டோரியா, ஆசிரியைகள் சார்பாக பழைய நினைவுகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஆசிரியை.மேகலா கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்நிகழ்வினை ஆசிரியைகள். ரோஸி மற்றும் எமல்டா ஒருங்கிணைத்தனர்.இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர் பெருமக்கள், முன்னாள் மாணவர், மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

 https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய....

  https://t.me/trichyvisionn